005.ஆட்கொள்ள வந்திடுவாய் - தூய
ஆட்கொள்ள வந்திடுவாய் - தூய
ஆவியே எழுந்தருள்வாய் - 2
ஆவலுடன் நான் காத்திருந்தேன் - 2 என்
ஆசைகள் மலர்ந்திட விரைந்திடுவாய் - 2
1. அக்கினிப் பிழம்பாய்க் கனன்றெழுந்து
தீமையை எரித்திட வந்திடுவாய்
இடியாய் மீண்டும் உருவெடுத்து
அடிமை வாழ்வினை அழித்திடுவாய்
இருளால் உலகம் தவிக்கின்றதே உன் வரவால் விடியலும் தந்திட வா
வாரும் தூய ஆவியே தாரும் உமதருட் கொடைகளை - 2
2. புயலாய்ச் சீறி சுழன்றெழுந்து தாழ்வினைப் போக்கிட வந்திடுவாய்
அலையாய்த் தொடர்ந்து வந்திங்கு மனிதம் மலர்ந்திடச் செய்திடுவாய்
மலையாய்த் துன்பம் எழுந்தாலும்
உன் வரவால் யாவும் நொறுங்கிடுமே
வாரும் தூய ஆவியே தாரும் உமதருட் கொடைகளை - 2
ஆவியே எழுந்தருள்வாய் - 2
ஆவலுடன் நான் காத்திருந்தேன் - 2 என்
ஆசைகள் மலர்ந்திட விரைந்திடுவாய் - 2
1. அக்கினிப் பிழம்பாய்க் கனன்றெழுந்து
தீமையை எரித்திட வந்திடுவாய்
இடியாய் மீண்டும் உருவெடுத்து
அடிமை வாழ்வினை அழித்திடுவாய்
இருளால் உலகம் தவிக்கின்றதே உன் வரவால் விடியலும் தந்திட வா
வாரும் தூய ஆவியே தாரும் உமதருட் கொடைகளை - 2
2. புயலாய்ச் சீறி சுழன்றெழுந்து தாழ்வினைப் போக்கிட வந்திடுவாய்
அலையாய்த் தொடர்ந்து வந்திங்கு மனிதம் மலர்ந்திடச் செய்திடுவாய்
மலையாய்த் துன்பம் எழுந்தாலும்
உன் வரவால் யாவும் நொறுங்கிடுமே
வாரும் தூய ஆவியே தாரும் உமதருட் கொடைகளை - 2