முகப்பு


023. ஒளியூட்டும் இறை ஆவியே - என்றும்
ஒளியூட்டும் இறை ஆவியே - என்றும்
வழிகாட்டும் நிறையுண்மையே
வழியறியா பேதை எந்தன் துயர் நீக்கித் துணைபுரிவாய்

1. அருளாகிப் பொருளாகி உயிர்களுக்குள் உயிராகி
வாழ்வோடு போராடும் நலிந்தவர்க்குத் திடமாகி – 2
இருளகற்றும் ஒளியாய் நீ வா
மனக்குறை போக்கும் மருந்தாக வா - 2
வற்றாத கார்மழையே காலத்தின் அறிகுறியே
என் வாழ்வின் கருப்பொருளே வா

2. நீர் மீது அசைவாடி வையகத்தைப் புதிதாக்கி
பாவமென்னும் நோய்நீக்கிப் புதுவாழ்வின் ஊற்றாகி - 2
புதுப்படைப்பாய் எனை மாற்ற வா - எங்கும்
இறையாட்சி நிறைவேற்ற வா – 2
தென்றலிலே பேசிடுவாய்த் திசை எட்டும் பரவிடுவாய்
எம் மூச்சாய் விளங்கிடவே வா