முகப்பு


036. விண்ணகத் தந்தையின் விண்ணகக் கொடையாய்
விண்ணகத் தந்தையின் விண்ணகக் கொடையாய்
விளங்கும் தூய ஆவியே எங்கள் எண்ணமும் செயலும்
உயர் அரும் கொடைகள் ஏழுடன் எம்முள் எழுந்தருள்வீர் - 2

1. அன்றொரு நாளில் அனற்பிழம்பாக
அப்போஸ்தலமே எழுந்தது போல – 2
இன்று எம் நெஞ்சில் வந்தருள்வீரே
இணையில்லா துணையைத் தந்தருள்வீர் - 2

2. பயமுடன் சோர்வும் பிணியும் நீங்க
பனிபோல் அருளைப் பரிவுடன் பொழிவீர் - 2
அயலவர்க்காகப் பணி பல ஆற்ற
ஆர்வமும் துணிவும் நல்கிடுவீர் - 2