முகப்பு


052. அழைப்பின் குரல் கேட்டேன் - என்
அழைப்பின் குரல் கேட்டேன் - என்
ஆண்டவர் என உணர்ந்தேன்
அருகினில் தயங்கி நடை பயின்றேன் - 2
பின்னே வா என முன்சென்றார் - 2

1. அறிவினில் குறைந்தவன் நானன்றோ – அதை
அறிந்தும் அழைத்தது ஏன் என்றேன் - 2
அறிஞர்கள் கண்டு நாணிடவே - 2
பின்னே வா என முன்சென்றார் - 2

2. வலிமை குறைந்தவன் நானன்றோ - அதை
தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் - 2
வலியவர் செருக்கினை அகற்றிடவே - 2
பின்னே வா என முன்சென்றார் - 2