149. தமிழால் உன் புகழ் பாடி தேவா நான் தினம் வாழ
தமிழால் உன் புகழ் பாடி தேவா நான் தினம் வாழ
வருவாயே திருநாயகா வரம் தருவாயே உருவானவா - 2
1. எனைச் சூழும் துன்பங்கள் கணையாக வரும்போது
துணையாகி எனை ஆள்பவா - 2
மனநோயில் நான் மூழ்கி மடிகின்ற பொழுதங்கு - 2
குணமாக்க வருவாயப்பா எனை உனதாக்கி அருள்வாயப்பா
2. உலகெல்லாம் இருளாகி உடனுள்ளோர் சென்றாலும்
வழிகாட்டும் ஒளியானவா - 2
நீதானே எனக்கெல்லாம் நினைவெல்லாம் நீதானே - 2
நாதா உன் புகழ் பாடுவேன் எனை நாளெல்லாம் நீ ஆளுவாய்
வருவாயே திருநாயகா வரம் தருவாயே உருவானவா - 2
1. எனைச் சூழும் துன்பங்கள் கணையாக வரும்போது
துணையாகி எனை ஆள்பவா - 2
மனநோயில் நான் மூழ்கி மடிகின்ற பொழுதங்கு - 2
குணமாக்க வருவாயப்பா எனை உனதாக்கி அருள்வாயப்பா
2. உலகெல்லாம் இருளாகி உடனுள்ளோர் சென்றாலும்
வழிகாட்டும் ஒளியானவா - 2
நீதானே எனக்கெல்லாம் நினைவெல்லாம் நீதானே - 2
நாதா உன் புகழ் பாடுவேன் எனை நாளெல்லாம் நீ ஆளுவாய்