முகப்பு


151. திருக்குலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே
திருக்குலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே
ஒருங்கிணைவோம் கரம் குவிப்போம்
உன்னதரைப் போற்றுவோம் - ஆகா
சந்தோசம் பெருகிடுதே அவர் சந்நிதி காண்கையிலே - 2

1. ஆனந்தமுடனே அவர் திருமுன்னே கூடிடுவோம் - 2
ஆண்டவரே நம் கடவுள் என்று பாடிடுவோம் - 2
அவரே நம்மைப் படைத்தார் அவருக்கே சொந்தம் நாம்
அவர் படைப்புகள் நாம் அவர் பிள்ளைகள் நாம்
அவர் மந்தையின் ஆடுகள் நாம்
2. இன்னிசை முழங்க இறைவன் வாசல் நுழைந்திடுவோம் - 2
பண்ணிசையோடு அவரது பீடம் சூழ்ந்திடுவோம் - 2
அவரைப் புகழ்ந்திடுவோம் அவர் பெயர் வாழ்த்திடுவோம்
அவர் நல்லவராம் அவர் வல்லவராம்
அவர் அன்பே நம்மை நடத்தும்