முகப்பு


173. மணியோசை கேட்டேன் குழலோசை கேட்டேன்
மணியோசை கேட்டேன் குழலோசை கேட்டேன்
ஆண்டவன் சந்நிதி ஓடோடி வந்தேன் - 2

1. ஆண்டவன் இல்லத்தில் வாழ்ந்திட வந்தேன்
ஆண்டவன் புகழினைப் பாடிட வந்தேன் - 2
ஆண்டவன் அருளினை அடைந்திட வந்தேன் - 2
ஆண்டவன் வாழ்வினைச் சுவைத்திட வந்தேன்

2. இறைவனின் நாமத்தைப் போற்றிட வந்தேன்
இறைவனின் வார்த்தையைக் கேட்டிட வந்தேன் - 2
இறைவனின் விருந்தினை அருந்திட வந்தேன் - 2
இறைவனின் ஆசீரை ஏற்றிட வந்தேன்