முகப்பு


177. வரம் கேட்டு வருகின்றேன் இறைவா என்
வரம் கேட்டு வருகின்றேன் இறைவா என்
குரல் கேட்டு அருளாயோ தலைவா - 2

1. பகைசூழும் இதயத்துச் சுவரை எல்லாம் - என்
பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன் - 2
புகை சூழ்ந்து இருள் வாழும் மனத்தில் எல்லாம் - 2 - உன்
பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன்

2. நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் - இனி
நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன் - 2
பலியாகப் பிறர்க்கென்னை அளித்திட்ட பின் - 2 - என்
பரிசாக உனைக் கேட்கும் வரம் கேட்கின்றேன்