முகப்பு


179. வருக வருக இணைந்து வருக வாழ்வைத் தேடுவோரே
வருக வருக இணைந்து வருக வாழ்வைத் தேடுவோரே
வாழ்வைப் பலியில் இணைத்து வாழ்ந்தால்
வானகம் மண் மலரும் -2 ஆ... ஆ... ஆ...லலல...லா - 2

1. இன்று போல் என்றும் இனி இல்லை - இது
இறைவன் தந்த அருள் திருநாள்
நாளை என வரும் கேள்வியிலே - அது
நமதெனப் பதில் தரத் துணிவுண்டோ
நேற்று வாழ்ந்த வாழ்வறிவோம் - அது
காற்றில் கலந்ததை உணர்வோம் - இந்த
பலியின் தலைமகன் இயேசுவையே - நாம்
படிப்பினை ஆக்கிப் பயணம் செய்வோம்

2. ஒன்றாய் வாழ்தல் நன்றன்றோ - அதைக்
கண்டார் கனவாய் நம் இயேசு
பகையும் போரும் வன்முறையும் - நாம்
பகையெனக் கொள்வோம் நம் மறையில்
ஆளல் அடக்கல் முறை ஒழிந்தால் - இறை
ஆட்சி ஒளிரும் தெருவெங்கும் - 2
இந்த உலகமே இனிய ஓர் அன்பியமாம்
இதை உணர்ந்தே பலிதனில் ஒன்றிணைவோம்