189. விடியலைத் தேடி வருகின்றேன் உன்
விடியலைத் தேடி வருகின்றேன் உன்
வார்த்தையை எந்தன் வாழ்வாக்கவே இறைவா - 2
1. நிலையானது என்றும் நிலையானது
உன் வார்த்தைகள் என்றும் நிலையானது
குறையாதது சற்றும் குறையாதது அதில்
உறைந்திடும் அன்பு குறையாதது
இங்கு உயிர் வாழ்கிறேன் உம்மில் நிறைவாகவே - 2
உந்தன் பணிவாழ்வை முழுதாக நிறைவேற்றவே - இன்று
2. சிந்தையிலே உந்தன் சொந்தங்களே
என்றும் ஓயாத அலையாக எழுகின்றதே
மந்தையின் ஆயனே என் இயேசுவே எந்தன் நெஞ்சமே
உமைக் காண விழைகின்றதே
நித்தம் கவி பாடுமே நாதா உமக்காகவே - 2
உந்தன் இனிதான கனவினை நனவாக்கவே - இன்று
வார்த்தையை எந்தன் வாழ்வாக்கவே இறைவா - 2
1. நிலையானது என்றும் நிலையானது
உன் வார்த்தைகள் என்றும் நிலையானது
குறையாதது சற்றும் குறையாதது அதில்
உறைந்திடும் அன்பு குறையாதது
இங்கு உயிர் வாழ்கிறேன் உம்மில் நிறைவாகவே - 2
உந்தன் பணிவாழ்வை முழுதாக நிறைவேற்றவே - இன்று
2. சிந்தையிலே உந்தன் சொந்தங்களே
என்றும் ஓயாத அலையாக எழுகின்றதே
மந்தையின் ஆயனே என் இயேசுவே எந்தன் நெஞ்சமே
உமைக் காண விழைகின்றதே
நித்தம் கவி பாடுமே நாதா உமக்காகவே - 2
உந்தன் இனிதான கனவினை நனவாக்கவே - இன்று