231. ஆண்டவரை நான் நம்பியுள்ளேன்
ஆண்டவரை நான் நம்பியுள்ளேன்
அவர் துணையைத் தினம் நாடுகிறேன் - 2
ஆண்டவர் தாமே என் வலிமை - 2 அவரே எனது அருட்துணையாம்
ஆதி அந்தமாய் வாழும் தேவனின் புகழினைப் பாடிடுவேன்
நாளும் பொழுதெனை வாழச் செய்திடும்
அன்பரைப் போற்றிடுவேன்
1. உடலும் உயிரும் தளர்ந்திட்ட போதும்
உமது பேரன்பில் உளமகிழ்வேன்
எனது துன்பம் அறிந்திருக்கின்றீர் - 2
எதிரியின் கையில் நின்று எனைக் காப்பீர் - ஆதி அந்தமாய்
2. கலங்கி அழுது கதறும் வேளையும்
கடவுளே உனதருள் கெஞ்சி நின்றேன்
என் குரல் கேட்டீர் அரவணைத்தீர் - 2
ஏழை என் விழிநீர் துடைத்துவிட்டீர் - ஆதி அந்தமாய்
அவர் துணையைத் தினம் நாடுகிறேன் - 2
ஆண்டவர் தாமே என் வலிமை - 2 அவரே எனது அருட்துணையாம்
ஆதி அந்தமாய் வாழும் தேவனின் புகழினைப் பாடிடுவேன்
நாளும் பொழுதெனை வாழச் செய்திடும்
அன்பரைப் போற்றிடுவேன்
1. உடலும் உயிரும் தளர்ந்திட்ட போதும்
உமது பேரன்பில் உளமகிழ்வேன்
எனது துன்பம் அறிந்திருக்கின்றீர் - 2
எதிரியின் கையில் நின்று எனைக் காப்பீர் - ஆதி அந்தமாய்
2. கலங்கி அழுது கதறும் வேளையும்
கடவுளே உனதருள் கெஞ்சி நின்றேன்
என் குரல் கேட்டீர் அரவணைத்தீர் - 2
ஏழை என் விழிநீர் துடைத்துவிட்டீர் - ஆதி அந்தமாய்