முகப்பு


249. இறைவனே என்னைக் காக்கின்றார்
இறைவனே என்னைக் காக்கின்றார்
இனியொரு குறையும் எனக்கில்லை
நிறைவழி நோக்கி நடத்திடுவார் நிம்மதியோடு நான் வாழ்வேன் - 2

1. பகலின் வெம்மையில் பயமில்லை
இருளின் நிலவிலும் தீமையில்லை - 2
நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார்
உன் கால் இடற விடுவதில்லை
உன்னதர் என்றும் அயர்வதில்லை - 2

2. இன்றும் என்றும் காப்பவராம்
பயணத்தில் துணையும் அவர் கரமாம் 2
நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார்
தீமையைக் கண்டு நான் அஞ்சேன்
நலமாய் நிதமும் நான் வாழ்வேன் - 2