264. என் ஆயன் இயேசிருக்க அவர் பாதம் நான் இருக்க
என் ஆயன் இயேசிருக்க அவர் பாதம் நான் இருக்க
எதிரிகளும் எனை வெல்வாரோ
எந்தத் தீமைகளும் எனை வீழ்த்திடுமோ - 2
1. வழிதவறி நான் அலைந்தேன் வாழும் வழி நான் தொலைத்தேன்
அன்பு தெய்வம் தேடி வந்தாரே - என்னை
அரவணைத்து அள்ளிச் சென்றாரே
பசும் புல்வெளியில் நடந்திடச் செய்தார்
பாசம் நேசம் பரிவும் தந்தார்
பாவ வழியை மட்டும் மறந்திடச் சொன்னார்
2. வானத்தையும் பூமியையும் அதில் வாழும்
உயிர்களையும் மனிதனையும் படைத்தவர் அவரே
உயர் மாண்புகளைத் தந்ததும் அவரே - 2
ஆண்டவர் எனக்கு அரணாய் உள்ளார்
ஆற்றல் அனைத்தும் எனக்குத் தந்தார்
திருடர்கள் எவரும் இந்த ஆட்டினைத் தீண்டார்
எதிரிகளும் எனை வெல்வாரோ
எந்தத் தீமைகளும் எனை வீழ்த்திடுமோ - 2
1. வழிதவறி நான் அலைந்தேன் வாழும் வழி நான் தொலைத்தேன்
அன்பு தெய்வம் தேடி வந்தாரே - என்னை
அரவணைத்து அள்ளிச் சென்றாரே
பசும் புல்வெளியில் நடந்திடச் செய்தார்
பாசம் நேசம் பரிவும் தந்தார்
பாவ வழியை மட்டும் மறந்திடச் சொன்னார்
2. வானத்தையும் பூமியையும் அதில் வாழும்
உயிர்களையும் மனிதனையும் படைத்தவர் அவரே
உயர் மாண்புகளைத் தந்ததும் அவரே - 2
ஆண்டவர் எனக்கு அரணாய் உள்ளார்
ஆற்றல் அனைத்தும் எனக்குத் தந்தார்
திருடர்கள் எவரும் இந்த ஆட்டினைத் தீண்டார்