முகப்பு


296. நெஞ்சார ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்திடுவேன்
நெஞ்சார ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்திடுவேன்
நீதிமான்கள் அவையினிலே அவர் புகழ் பாடிடுவேன் - 2

1. ஆண்டவர் செயல்கள் மகத்தானவை
இன்பம் அவற்றில் கொள்வோர் உய்த்துணர்வார் - 2
மாண்புமிக்க அவர் தம் செயல் யாவும்
என்றும் மலைபோல் அவர் தம் நீதி நிலைக்கும்

2. வியத்தகு செயல்கள் நினைவினிலே
என்றும் விளங்கிட அவரே செய்தாரே - 2
தயவுடன் அன்பும் உள்ளவரே - அவர்
தமக்கஞ்சும் மனிதர்க்கு உணவளித்தார்