முகப்பு


307. பாலைவனம் சோலையாகும் பஞ்சமெல்லாம்நீங்கிப் போகும்
பாலைவனம் சோலையாகும் பஞ்சமெல்லாம்நீங்கிப் போகும்
பரமன் இயேசு பார்வையினாலே
நெஞ்சமெல்லாம் இனிமையாகும்
நினைத்ததெல்லாம் நிறைவேறும்
நம் இயேசு வார்த்தையினாலே - 2
நம் தேவன் நல்லவரே நம் தேவன் வல்லவரே

1. ஆண்டவரை மனத்தில் வைத்து
அனைத்தையும் நாம் செய்யும் போது
பாதைகளை அவர் செம்மையாக்குவார் - 2
அவரை நோக்கிப் பார்த்தவர்கள் அவமானம் அடைவதில்லை - 2
ஆயிரமாய் ஆசீர் பெறுவார் ஆனந்தம் அடைந்திடுவார்

2. திராட்சைச் செடியின் கிளை போல
இயேசுவோடு இணைந்திருப்போம்
பலன் தருவோம் நலன்கள் பெறுவோம் - 2
என்ன குறை இருந்தாலும் அவரோடு நாம் இருந்தால் - 2
எல்லாமே நிறைவாகுமே நம் வாழ்வெல்லாம் மகிழ்வாகுமே