முகப்பு


313. மான்கள் நீரோடை ஆர்வமாய் நாடுதல் போல்
மான்கள் நீரோடை ஆர்வமாய் நாடுதல் போல்
இறைவா என் நெஞ்சம் உம்மை நாடிடுதே - கலை - 2

1. அடைக்கலான் குருவிக்கு வீடும் கிடைத்தது
தகைவிலான் குஞ்சுக்குக் கூடும் கிடைத்தது - 2
ஆனால் இறைவா எம் அரசே - 2
எனக்கோ உம்மிடம் தஞ்சம் கிடைத்தது
எனக்கோ உம்மிடம் தஞ்சம் கிடைத்துள்ளது

2. வறண்ட பாலைக்கு நீரும் கிடைக்கும்
ஏங்கும் நெஞ்சுக்கு வார்த்தையும் கிடைக்கும் - 2
ஆனால் இறைவா என் உயிரே
நீயின்றி எனக்கு வாழ்வெங்குக் கிடைக்கும்
நீயின்றி எனக்கு வாழ்வு எங்குக் கிடைக்கும்