முகப்பு


329. அழகிய கவிதையில் பாடிடுவேன்
அழகிய கவிதையில் பாடிடுவேன்
அவனியில் அவர் புகழ் சாற்றிடுவேன் - 2

1. அறிவிலி எனையே அவர் நினைத்தார்
ஆற்றல் அனைத்தும் எனக்களித்தார் - 2
எரித்திடும் துயரில் எனைக் காத்தார்
எனவே அவர் என் ஆண்டவரே

2. துன்பச் சூழல்கள் சூழ்கையிலே
கவலைக் கறைகள் படர்கையிலே - 2
அன்பின் கரத்தால் அரவணைத்தார்
ஆகவே அவர் என் ஆண்டவரே