முகப்பு


330.அழைத்தது நானல்லவா மகனே மகளே நீ கலங்காதே
அழைத்தது நானல்லவா மகனே மகளே நீ கலங்காதே
படைத்தது நானல்லவா மகனே மகளே நீ திகையாதே
பகலும் இரவும் காப்பது நானே என் உறவே அகலாதே
நான் உனக்காக வருகின்றேன்

1. உன் உறவாய் நான் இருப்பேன் வழிமுழுதும் காத்திடுவேன்
உன் நிழலாய் நான் வருவேன் சுமைமுழுதும் நான் சுமப்பேன்
இதுகருவில் உருவான உறவல்லவா தாயுமானவன் நான் அல்லவா
என் சிறகில்வாழ்வில்நீயல்லவா என் தோள்கள் இருப்பது உனக்கல்லவா
உனை நான் வரைந்தேன் உயிராய்ச் சுமப்பேன்

2. விண்ணும்மண்ணும்மாறிடலாம்சொந்தமும்பந்தமும்விலகிடலாம்
பாசமும் நேசமும் பிரிந்திடலாம் பெற்ற தாயும் உன்னை மறந்திடலாம்
விழுந்தாலும் எழுந்தாலும் தாங்கிடுவேன்
நீ என்னை வெறுத்தாலும் காத்திடுவேன்
மாறாதுமறையாதுசொல்அல்லவாகுறிகளும்குறையாஎன்அன்பல்லவா
உனை நான் மறவேன் உயிராய்ச் சுமப்பேன்