முகப்பு


334. அன்பெனும் வீணையிலே நல் ஆனந்தக் குரலினிலே
அன்பெனும் வீணையிலே நல் ஆனந்தக் குரலினிலே
ஆலய மேடையிலே உன் அருளினைப் பாடிடுவேன் - 2

1. அகமெனும் கோயிலிலே என் தெய்வமாய் நீ இருப்பாய் - 2
அன்பெனும் விளக்கேற்றி உன் அடியினை வணங்கிடுவேன்

2. வாழ்வெனும் சோலையிலே நல் தென்றலாய் நீ இருப்பாய் - 2
தூய்மையென்னும் மலரை நான் தாள்மலர் படைத்திடுவேன்