336. அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ வா
அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ வா
அன்பால் நெஞ்சம் ஆளச் சொல்லித் தா - 2
ஏழை எந்தன் உள்ளம் நீ வா ஏங்கும் எந்தன் தாகம் தீர்க்க வா
வாழ்வென்னும் பாடம் கற்றுத் தா - 2
1. தாய் போல என்னைத் தாலாட்டுப் பாடிச் சேயாக நீயும் சீராட்டினாய்
நீர்தேடிச் செல்லும் மான்போல நானும் உம் பாதம் சேர வழிகாட்டினாய்
நீயில்லையென்றால் நானும் இல்லையே
நீயின்றிப்போனால் வாழ்வுமில்லையே
நீதானே எந்தன் வாழ்வின் செல்வமே
நீயின்றி வாழ்வில் எல்லாம் சோகமே
வீழ்கின்ற நேரங்கள் விதையாக மடிந்தாலும்
எழுகின்ற நேரங்கள் புது வாழ்வின் பாதைகள்
வாழ்வென்னும் பாடம் கற்றுத் தா - 2
2. நிலவென்னும் கண்கள் நீர்பூக்கும் வேளை
நிலமாக நின்று தாங்கிக் கொள்ளுவாய்
மலர்ச் சோலை நானும் மலராது போனால்
மழையாக என்னில் வளம் சேர்க்க வா
நீயில்லையென்றால் இன்பம் சேருமா
நீ என்னுள் சேர்ந்தால் சோகம் தங்குமா
நீயில்லையென்றால் கீதம் தோன்றுமா
நீ என்னில் சேர்ந்தால் பேதம் வேண்டுமா
என் வாழ்வில் எல்லாமே நீ தந்த செல்வங்கள்
என் வாழ்வில் துன்பங்கள் நீர் பூத்த வானங்கள்
வாழ்வென்னும் பாடம் கற்றுத் தா - 2
அன்பால் நெஞ்சம் ஆளச் சொல்லித் தா - 2
ஏழை எந்தன் உள்ளம் நீ வா ஏங்கும் எந்தன் தாகம் தீர்க்க வா
வாழ்வென்னும் பாடம் கற்றுத் தா - 2
1. தாய் போல என்னைத் தாலாட்டுப் பாடிச் சேயாக நீயும் சீராட்டினாய்
நீர்தேடிச் செல்லும் மான்போல நானும் உம் பாதம் சேர வழிகாட்டினாய்
நீயில்லையென்றால் நானும் இல்லையே
நீயின்றிப்போனால் வாழ்வுமில்லையே
நீதானே எந்தன் வாழ்வின் செல்வமே
நீயின்றி வாழ்வில் எல்லாம் சோகமே
வீழ்கின்ற நேரங்கள் விதையாக மடிந்தாலும்
எழுகின்ற நேரங்கள் புது வாழ்வின் பாதைகள்
வாழ்வென்னும் பாடம் கற்றுத் தா - 2
2. நிலவென்னும் கண்கள் நீர்பூக்கும் வேளை
நிலமாக நின்று தாங்கிக் கொள்ளுவாய்
மலர்ச் சோலை நானும் மலராது போனால்
மழையாக என்னில் வளம் சேர்க்க வா
நீயில்லையென்றால் இன்பம் சேருமா
நீ என்னுள் சேர்ந்தால் சோகம் தங்குமா
நீயில்லையென்றால் கீதம் தோன்றுமா
நீ என்னில் சேர்ந்தால் பேதம் வேண்டுமா
என் வாழ்வில் எல்லாமே நீ தந்த செல்வங்கள்
என் வாழ்வில் துன்பங்கள் நீர் பூத்த வானங்கள்
வாழ்வென்னும் பாடம் கற்றுத் தா - 2