முகப்பு


343. ஆன்மாவின் ஆனந்தமே அழியாத பேரின்பமே
ஆன்மாவின் ஆனந்தமே அழியாத பேரின்பமே
உன் சேயாய் நானும் என் தாயாய் நீயும் வாழ்ந்தாலே தெய்வீகமே - 2

1. நெஞ்சினிலே நிதம் வைத்தீர் சிந்தையிலே உருப்பதித்தீர்
உன் அன்பில் எனை மறந்தேனே - 2
ஆறாத காயங்களில் தீராத துன்பங்களில்
உம் வார்த்தையால் குணம் தந்தீரே
என்னுயிர் நண்பன் விழியினிலே - 2
கண்மணி நான் கலங்கிடுவேனா(னோ) - 2

2. உன் தோளில் எனைச் சுமந்து உன் அன்பில் நிதம் நனைத்துக்
கலங்காதே என மொழிந்தீரே ஆ - 2
நலனின்றிப் போய்விடினும் நம்பிக்கைச் சாய்ந்திடினும்
என்னருகில் நீர் இருப்பீரே
என்னுயிர் நண்பன் விழியினிலே - 2
எதுவரினும் துணிந்திருப்பேனே - 2