முகப்பு


346.இதயத் துடிப்பின் ஓசையிலே
இதயத் துடிப்பின் ஓசையிலே
இறைவா உன்னைத் தேடுகிறேன்
எண்ண அலைகளின் நடுவினிலே உந்தன் தரிசனம் நாடுகிறேன்
இதயத்தின் நினைவினிலே சுவாசிக்கும் காற்றினிலே
உயிர்களின் இயக்கத்திலே உன்னைக் காண்கின்றேன்
பாடுகிறேன் வாழ்வு பெற ஆ

1. வானின் அமுதம் நீ வாழ்வின் பாடம் நீ
வாழ்வை வளமாக்கும் நீர் தரும் மேகம் நீ - 2
சீவன்உனைதினம்தேடுகிறேன்உனைக்காணாமல்நான்வாடுகிறேன்
வானமுதே வான் மழையே வா
உன்னைக் கண்டாலே உள்ளம் பூப்பூக்கும்
உன் மொழி கேட்டாலே உதயம் வசமாகும்
உந்தன் நினைவுகளால் உள்ளம் இனிதாகும்
உந்தன் உடன் வரவால் சுமைகளும் சுகமாகும்

2. கலைகளின் சங்கமம் நீ கவினுறு கலைஞனும் நீ
மண்ணை விண்ணாக்கும் மாண்புறு மன்னவன் நீ - 2
உயிர்களிலே நிதம் உனைக் காண்பேன்
உயிர் துடிப்பினிலே உன் கரம் உணர்வேன்
காலமெல்லாம் வாழ்ந்திடவே வா வா - உன்னைக் கண்டாலே