முகப்பு


358. இயேசுவின் கரங்களில் நான் தவழ்கின்றேன்
இயேசுவின் கரங்களில் நான் தவழ்கின்றேன்
இனி என்ன கவலை
கேட்பதை எல்லாம் கொடுத்திடும் இயேசு
இருக்கையில் ஏன் கவலை - 2

1. என் தேவை என்னவென்று படைத்தவர் அவர் அறிவார்
என்னையே நான் கொடுத்துவிட்டேன் அவரே பார்த்துக் கொள்வார் - 2

2. என் இதயம் கவலையினால் மிகுந்திடும் வேளையிலே
ஆண்டவர் தம் ஆறுதலால் இன்பத்தில் ஆழ்த்துகிறார் - 2

3. உம் வழியில் என் கால்கள் தள்ளாடும் நேரத்திலே
ஆண்டவரே உன் அருளோ என்னைத் தாங்கிடுதே - 2