முகப்பு


365. இறையவனே உன்னை நான் காண வந்தேனே
இறையவனே உன்னை நான் காண வந்தேனே
என்னவனே என்னை நான் உன்னிடம் தந்தேன்
நீயே எனக்கு எல்லாம் நீயே எனக்கு எல்லாம் - 2

1. தனிமைக் குளிரும் நிலவாகும் நீ என்னோடு இருப்பதால்
தடுக்கும் கல்லும் தடமாகும் நீ எனக்காய் நடப்பதால் - 2
காரிருள் ஒளிரும் சுடராகும் நீ என் முகம் பார்ப்பதால்
கசக்கும் உறவும் கரும்பாகும் நீ என் கரம் பிடிப்பதால்

2. வீசும் புயலும் பூவாகும் நீ என் மனம் நிறைவதால்
சுமையும் இனிய சுகமாகும் நீ எனக்காய்ச் சுமப்பதால் - 2
பாவ வாழ்வும் பனியாகும் நீ என் கறை துடைப்பதால்
எல்லாம் இன்றே இனிதாகும் நீயும் நானும் இணைவதால்