முகப்பு


373. உந்தன் கைகளில் நான் சின்னப் பிள்ளையாய்த்
உந்தன் கைகளில் நான் சின்னப் பிள்ளையாய்த்
தவழ்ந்தாட வேண்டும் செல்ல மலராய்
எந்தன் உயிரே நான் உந்தன் நிழலில்
வளர்ந்தாக வேண்டும் வளர்பிறையாய் - 2

1. பெற்ற தாயின் அன்புக்கு மேலாகவே
வற்றாத அருளைப் பொழிந்தாயே - 2
உந்தன் கரத்தில் என்னைப் பொதித்தாயே
என்னை முழுதும் நீ அறிந்தாயே

2. இருள்நிறை பள்ளத்திலும் வீழ்ந்தாலுமே
அணைத்தென்னைத் தோள்மேல் சுமந்தாயே - 2
கருணையினை கற்றுத் தந்தாயே
உந்தன் வரத்தால் என்னை நிறைத்தாயே