378. உள்ளம் உருகிப் பாடுவேன் உன்னையே இயேசுவே
உள்ளம் உருகிப் பாடுவேன் உன்னையே இயேசுவே
பிள்ளை போல மழலையில் உன்னிடம் பேசுவேன் - 2
எந்தன் குரலைக் கேட்ட நீ என்னில் வாழுவாய்
கள்ளம் நீக்கி கயமை மாற்றி என்னை ஆளுவாய்
1. உண்மை வாழ்வும் வாழும்போது உலகம் வெறுத்திடும்
உனது நெஞ்சம் ஒன்றினாலும் என்னை ஏற்றிடும் - 2
உன்னை அன்றி வேறு துணை உலகில் எனக்கில்லை
உள்ளத்திலே நீ குடிகொண்டாலே கவலை எனக்கில்லை - 2
2. அன்னை என்று அழைத்தபோது நீயே தோன்றினாய்
அரவணைக்கும் கரங்களிலே என்னை ஏந்தினாய் - 2
இன்னல் என்னை என்ன செய்யும் நீதான் இருக்கையிலே
இன்பம் நாளும் என்னுள் தங்கும் எந்தன் வாழ்வினிலே - 2
பிள்ளை போல மழலையில் உன்னிடம் பேசுவேன் - 2
எந்தன் குரலைக் கேட்ட நீ என்னில் வாழுவாய்
கள்ளம் நீக்கி கயமை மாற்றி என்னை ஆளுவாய்
1. உண்மை வாழ்வும் வாழும்போது உலகம் வெறுத்திடும்
உனது நெஞ்சம் ஒன்றினாலும் என்னை ஏற்றிடும் - 2
உன்னை அன்றி வேறு துணை உலகில் எனக்கில்லை
உள்ளத்திலே நீ குடிகொண்டாலே கவலை எனக்கில்லை - 2
2. அன்னை என்று அழைத்தபோது நீயே தோன்றினாய்
அரவணைக்கும் கரங்களிலே என்னை ஏந்தினாய் - 2
இன்னல் என்னை என்ன செய்யும் நீதான் இருக்கையிலே
இன்பம் நாளும் என்னுள் தங்கும் எந்தன் வாழ்வினிலே - 2