381. உன் அருள் ஒன்றே எனக்கு வேண்டும் வேண்டும் வேண்டும்
உன் அருள் ஒன்றே எனக்கு வேண்டும் வேண்டும் வேண்டும்
உன் நிழலில் தானே வாழ்ந்திட வேண்டும் இயேசுவே இயேசுவே
உன் அருள் ஒன்றே எனக்கு வேண்டும் இயேசுவே இயேசுவே
என்னிலை உன்னில் இழந்திட வேண்டும்
புது உருவுன்னில் அடைந்திட வேண்டும் - 2
1. ஆறுகள் கடலில் கலப்பது போல்
மழைத்துளி மண்ணில் சேர்வது போல் - 2
உணவினில் கரைந்திடும் உப்பினைப் போல்
என்னிலை உன்னில் இழந்திட வேண்டும் - 2
கூட்டினை அடைந்திடும் பறவையைப் போல்
மலரினில் தங்கிடும் தேன்துளிபோல் - 2
குழலினில் புகுந்திடும் காற்றினைப்போல்
உனக்குள்ளே நானும் சேர்ந்திட வேண்டும் - 2 - உன் அருள்
2. மழைமேகம் கண்ட உழவனைப்போல்
தாலாட்டை ரசிக்கும் குழந்தையைப்போல் - 2
செல்வத்தைப் பெற்றிடும் வறியவர்போல்
உனைக் கண்டு நான்தினம் மகிழ்ந்திட வேண்டும் - 2
மலரினைச் சுற்றிடும் வண்டினைப்போல்
தொடர்ந்திடும் கடலின் அலையினைப்போல் - 2
நீரைத் தேடிச் செல்லும் வேரினைப் போல்
ஓயாது நான் உனைத் தொடர்ந்திட வேண்டும் - 2 - உன் அருள்
உன் நிழலில் தானே வாழ்ந்திட வேண்டும் இயேசுவே இயேசுவே
உன் அருள் ஒன்றே எனக்கு வேண்டும் இயேசுவே இயேசுவே
என்னிலை உன்னில் இழந்திட வேண்டும்
புது உருவுன்னில் அடைந்திட வேண்டும் - 2
1. ஆறுகள் கடலில் கலப்பது போல்
மழைத்துளி மண்ணில் சேர்வது போல் - 2
உணவினில் கரைந்திடும் உப்பினைப் போல்
என்னிலை உன்னில் இழந்திட வேண்டும் - 2
கூட்டினை அடைந்திடும் பறவையைப் போல்
மலரினில் தங்கிடும் தேன்துளிபோல் - 2
குழலினில் புகுந்திடும் காற்றினைப்போல்
உனக்குள்ளே நானும் சேர்ந்திட வேண்டும் - 2 - உன் அருள்
2. மழைமேகம் கண்ட உழவனைப்போல்
தாலாட்டை ரசிக்கும் குழந்தையைப்போல் - 2
செல்வத்தைப் பெற்றிடும் வறியவர்போல்
உனைக் கண்டு நான்தினம் மகிழ்ந்திட வேண்டும் - 2
மலரினைச் சுற்றிடும் வண்டினைப்போல்
தொடர்ந்திடும் கடலின் அலையினைப்போல் - 2
நீரைத் தேடிச் செல்லும் வேரினைப் போல்
ஓயாது நான் உனைத் தொடர்ந்திட வேண்டும் - 2 - உன் அருள்