முகப்பு


382. உன் கண்ணுக்குள்ளே கண்மணியாய் இருக்கின்றேன்
உன் கண்ணுக்குள்ளே கண்மணியாய் இருக்கின்றேன்
உன் கருணை மழையில் தினம் தினம் நான் நனைகின்றேன் - 2
காலையிலும் உன் முகமே மாலையிலும் உன் முகமே
இனிய இயேசுவை நான் காண்கின்றேன் - இனி
உனதன்பை என்றும் நான் பாடுவேன்

1. உலகில் என்னைத் தெரிந்து கொண்ட தெய்வம் நீ அல்லவா
உயிரைத் தந்து காக்கும் தெய்வம் என்றும் நீயல்லவா - 2
உன்பாதம்அமர்ந்துவாழ்வதுஒன்றேஉன்னைநான்கேட்கிறேன்-2
உன் முகம் பார்த்து என்னையே
நானே மறக்கின்றேன் தெய்வமே

2. உனது திருக்கரம் என்னை நடத்த எனக்குக் கவலையில்லை
நல்ல மேய்ப்பன் உந்தன் வழியில் எந்தக் குறைவுமில்லை - 2
உன் மந்தை சேர்ந்த ஆட்டைப் போல என்றும் நான் வாழுவேன் - 2
எந்தத் தீங்கும் எனைத் தொடாமல் என்னைக் காத்திடுமே