முகப்பு


389. உன் பாதம் சரணாகின்றேன் - 2
உன் பாதம் சரணாகின்றேன் - 2
உனில் வாழும் நினைவாகின்றேன்
உனைப் பிரியா உறவாகின்றேன் உனைச் சேரும் உயிராகின்றேன்

1. இமையாக எனை நீ காத்தாய்இருள் போகும்வாழ்வு மகிழ்வாகும் - 2
இறவாதது உன் இரக்கந்தான்
நிஜமானது உன் பேரன்புதான் இயேசையா இயேசையா
கருவிலேக் காத்திடும் உன் அன்புக்கரம் கண்டு
களிப்புடன் வாழ்ந்திட கடவுளே சரணம்

2. கடல் தேடும் நதி நானாக நிலம் தேடும் மழை நீயாக - 2
உடன் வாழ்வது உன் அன்புதான்
உயிர் ஈவதும் உன் பண்புதான் இயேசையா இயேசையா
கடலினில் நதியினில் நிலத்தினில் மழையினில்
தேடலின் இறைவனே நானுனைக் கண்டிட