முகப்பு


392. உன்னாலே நான் உயிர் வாழ்வேன் - உன்
உன்னாலே நான் உயிர் வாழ்வேன் - உன்
துணையில் நான் வாழ்ந்திருப்பேன்
நான் இருப்பது நடப்பது எல்லாமே
உன்னாலே தான் இறைவா - 2

1. வாழும் காலமெல்லாம் உன் நினைவில் வாழ்ந்திடுவேன்
பேசும் மொழியில் எல்லாம் உன் நாமத்தை முழங்கிடுவேன் - 2
நீயில்லா வாழ்வில் நிம்மதியும் நிலையாய் இருந்திடுமோ
உன் அருள் கொடையும் இல்லாமல் வாழ்வும் மலர்ந்திடுமோ
நிறைவான அமைதி பெறுவதெல்லாம் உன்னிடம் தானன்றோ

2. துன்பங்கள் சூழ்ந்தாலும் உன் துணையை நம்பிடுவேன்
சொந்தங்கள் வெறுத்தாலும் உன் அணைப்பில்மகிழ்ந்திடுவேன் - 2
நீ என்றும் என்னுடன் இருப்பதனால் கலக்கம் எனக்கு இல்லை
கோட்டையும் அரணுமாய்க் காப்பதனால்
எதற்கும் பயமுமில்லை
கண்மணி போல எனைக் காக்கும் தெய்வம் நீயன்றோ