393. உன்னை எண்ணி இறைவா உள்ளம் நிறைந்தேன் - இந்த
உன்னை எண்ணி இறைவா உள்ளம் நிறைந்தேன் - இந்த
உலகையே ஆளும் உந்தன் அன்பில் நனைந்தேன்
கண்ணின் மணியெனவே என்னைக் காத்து வந்தாய்
சின்ன வழியினிலே என்னை அழைத்து வந்தாய்
நாள்தோறும் நூறாகப் பலன்தருவேன் - என் இறைவா
வேராக நீ என்னில் இணைந்திருந்தால்
1. நீலவானம் பனிசிந்தும் மேகம்
நிதம்வந்து கரைதேடும் அலைகளும்
வீசும் தென்றல் வாச மலர்கள் பேசாமல் உன்புகழ் பேசுதே
படைப்பின் சிகரம் நானே உந்தன் பாதம் அமர்ந்திடுவேனே
மகிழ்வேன் புகழ்வேன் நினைத்துன்னைப் பாடுவேன்
2. தேனினும் இனிமை தெய்வீக மகிமை
தேவனே உன்திரு வார்த்தையே
அறியாத பிள்ளை ஆட்கொண்டு என்னை
அகலாய் மலைமேல் உயர்த்தினாய்
உன் சாயல் நானே அன்றோ உருமாற்றியது நீ அன்றோ
மலர்வேன் வளர்வேன் நன்றியைப் பாடுவேன்
உலகையே ஆளும் உந்தன் அன்பில் நனைந்தேன்
கண்ணின் மணியெனவே என்னைக் காத்து வந்தாய்
சின்ன வழியினிலே என்னை அழைத்து வந்தாய்
நாள்தோறும் நூறாகப் பலன்தருவேன் - என் இறைவா
வேராக நீ என்னில் இணைந்திருந்தால்
1. நீலவானம் பனிசிந்தும் மேகம்
நிதம்வந்து கரைதேடும் அலைகளும்
வீசும் தென்றல் வாச மலர்கள் பேசாமல் உன்புகழ் பேசுதே
படைப்பின் சிகரம் நானே உந்தன் பாதம் அமர்ந்திடுவேனே
மகிழ்வேன் புகழ்வேன் நினைத்துன்னைப் பாடுவேன்
2. தேனினும் இனிமை தெய்வீக மகிமை
தேவனே உன்திரு வார்த்தையே
அறியாத பிள்ளை ஆட்கொண்டு என்னை
அகலாய் மலைமேல் உயர்த்தினாய்
உன் சாயல் நானே அன்றோ உருமாற்றியது நீ அன்றோ
மலர்வேன் வளர்வேன் நன்றியைப் பாடுவேன்