396. உன்னை நான் புகழ்ந்திட ஒரு வரம் வேண்டினேன்
உன்னை நான் புகழ்ந்திட ஒரு வரம் வேண்டினேன்
உன்னை அன்பு செய்திட உன்னருள் தேடினேன் - 2
உன் நாமம் பாடிடவும் உனக்காக வாழ்ந்திடவும்
உன் அன்புத் துணையினை நான் தினமும் நாடினேன் - 2
1. உனையன்றி எனக்கென்று வேறொரு தலைவனுண்டோ
நீயின்றி என் இதயம் நிறைவினை அடைவதுண்டோ - 2
கார்முகிலாய் என் வாழ்வில் கருணைமழை பொழிபவனே
கனவிலும் நான் உனைப்பிரியா வரமொன்று தாருமையா
2. பாசத்தின் கண்கொண்டு பாவியைப் பார்க்கையிலே
பாவச்சுமை உன் கண்களுக்குப் பாரமாய்த் தெரிவதில்லை - 2
உன் கையில் எனைப் பொறித்தாய்
உன் தோளில் எனைச் சுமந்தாய்
உன் அருளின்றிப் பதிலன்பு செய்ய எனக்கேது திறனையா
உன்னை அன்பு செய்திட உன்னருள் தேடினேன் - 2
உன் நாமம் பாடிடவும் உனக்காக வாழ்ந்திடவும்
உன் அன்புத் துணையினை நான் தினமும் நாடினேன் - 2
1. உனையன்றி எனக்கென்று வேறொரு தலைவனுண்டோ
நீயின்றி என் இதயம் நிறைவினை அடைவதுண்டோ - 2
கார்முகிலாய் என் வாழ்வில் கருணைமழை பொழிபவனே
கனவிலும் நான் உனைப்பிரியா வரமொன்று தாருமையா
2. பாசத்தின் கண்கொண்டு பாவியைப் பார்க்கையிலே
பாவச்சுமை உன் கண்களுக்குப் பாரமாய்த் தெரிவதில்லை - 2
உன் கையில் எனைப் பொறித்தாய்
உன் தோளில் எனைச் சுமந்தாய்
உன் அருளின்றிப் பதிலன்பு செய்ய எனக்கேது திறனையா