முகப்பு


400. எந்தன் செபவேளை உமைத் தேடி வந்தேன்
எந்தன் செபவேளை உமைத் தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடிவந்தேன் - 2

1. சோராது செபித்திட செப ஆவி வரம் தாருமே
தடை யாவும் அகற்றிடுமே தயை வேண்டி உம் பாதம் வந்தேன் - 2

2. உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிடக் காத்திருப்பேனே - 2