401. எந்தன் நெஞ்சம் சிந்து பாடும்
எந்தன் நெஞ்சம் சிந்து பாடும்
நீரே தஞ்சம் என்று உம்மைத் தேடும் - 2
அரணும் நீரே கோட்டையும் நீரே
சரணடைந்தேனே ஆண்டவர் நீரே
என் வாழ்வின் நம்பிக்கை நீரே
1. காரிருளில் ஒளி தந்தவரே உம்மைக்
காலமெல்லாம் இனி நான் மறவேன்
கண்மணிபோல் என்னைக் காப்பவரே உம்
காலடியை இனி நான் தொடர்வேன்
கனிவாய் என்னில் உறைபவரே உன்
கடைக்கண் பார்வையால் தாங்குமையா
கடைசிவரை என்னைக் காப்பவரே - உன்
கருணையின் நிழலில் தேற்றுமையா
கரம்பிடித்துவழி நடத்துமையா
2. ஆண்டவரே உன் இல்லத்திலே நான்
ஆயுள் முழுவதும் குடியிருப்பேன்
ஆண்டவரே உன் பாதத்திலே தினம்
அமர்ந்து உம் மொழி கேட்டிடுவேன்
என் வார்த்தைகளெல்லாம் இனிதாகும்
என் எண்ணங்களெல்லாம் நிறைவேறும்
கனவுகளெல்லாம் நனவாகும்
மனக் காயங்களெல்லாம் குணமாகும் - உம்
சிறகினில் என்னைச் சுமந்திடுவாய்
நீரே தஞ்சம் என்று உம்மைத் தேடும் - 2
அரணும் நீரே கோட்டையும் நீரே
சரணடைந்தேனே ஆண்டவர் நீரே
என் வாழ்வின் நம்பிக்கை நீரே
1. காரிருளில் ஒளி தந்தவரே உம்மைக்
காலமெல்லாம் இனி நான் மறவேன்
கண்மணிபோல் என்னைக் காப்பவரே உம்
காலடியை இனி நான் தொடர்வேன்
கனிவாய் என்னில் உறைபவரே உன்
கடைக்கண் பார்வையால் தாங்குமையா
கடைசிவரை என்னைக் காப்பவரே - உன்
கருணையின் நிழலில் தேற்றுமையா
கரம்பிடித்துவழி நடத்துமையா
2. ஆண்டவரே உன் இல்லத்திலே நான்
ஆயுள் முழுவதும் குடியிருப்பேன்
ஆண்டவரே உன் பாதத்திலே தினம்
அமர்ந்து உம் மொழி கேட்டிடுவேன்
என் வார்த்தைகளெல்லாம் இனிதாகும்
என் எண்ணங்களெல்லாம் நிறைவேறும்
கனவுகளெல்லாம் நனவாகும்
மனக் காயங்களெல்லாம் குணமாகும் - உம்
சிறகினில் என்னைச் சுமந்திடுவாய்