முகப்பு


403.என் அன்புத் தாயாக எனைக் காக்கும் இறைவா
என் அன்புத் தாயாக எனைக் காக்கும் இறைவா
உனையன்றி சொந்தங்கள் வேறில்லையே - 2
என் உறவானவா என் உயிரானவா - என்
வாழ்வெல்லாம் நீயே துணையாக வா - 2

1. கரங்களில் என்னைப் பொறித்தவரே
உன் தோளினில் என்னைச் சுமந்தவரே - 2
கருணையின் மழையேதெய்வமேகாலங்கள்கடந்த பரம்பொருளே
கண்ணின் மணியாய் காப்பவரே தாய்மையின் உருவம்ஆனவரே
ஏழிசை மீட்டியே இறையுன்னைப் புகழ்வேன்
உன் பதம் பணிவேன் மாபரனே
பொன் மனம் படைத்தவன் புகழினைப் பாடுவேன்
கருமுதல் காக்கும் தாயவனே - 2
கருமுதல் காக்கும் தாயவனே

2. வியத்தகு இறைவனின் படைப்புகளெல்லாம்
உயிரே உந்தன் அருட்கொடையே - 2
துணையாய்இருப்பதுநீயென்றால்தோல்வியைக் கண்டு பயமேது
வறியவர் வாழ்வில் வளம் சேர்க்க
வாழ்வை முழுவதும் உமக்களிப்பேன் - ஏழிசை