410. என் தெய்வமே எனை மீட்க வாருமே
என் தெய்வமே எனை மீட்க வாருமே
உன் திருப்பாதையில் நான் செல்லும் நேரமே
அன்பின் பூக்களே எந்தன் வாழ்வினில் மலர்ந்திடச் செய்யுமே
1. கவலையினால் வரும் சோகம் உன் பார்வையில் மகிழ்வாய் மாறும்
அலை அலையாய் வரும் ஏக்கம்
உன் நினைவால் பனியாய் உருகும்
தேவனே உன் வார்த்தையில் நிலைத்திட வரம் தருவாய்
கானமே என் சீவனில் கலந்து உன் புகழ்பாடும்
இயேசுவே என் வசந்தமே மலர்ந்திட வாருமே
இயேசுவே என் நண்பனே அணைத்திட வாருமே
2. பாதத்தில் அமர்ந்திடும் நேரம் என் ஆன்மா உன்னிடம் பேசும்
உணர்வினால் எழுந்திடும் பாசம்
என் வாழ்வினில் நிழலாய்த் தொடரும்
தேவனே உன் பாதையில் நடத்திட கரம் பிடிப்பாய்
தேவனே உன் பார்வையில் நடந்திட அருள் புரிவாய்
தேவனே உன் பாதையில் நடந்திட கரம் பிடிப்பாய்
உன் திருப்பாதையில் நான் செல்லும் நேரமே
அன்பின் பூக்களே எந்தன் வாழ்வினில் மலர்ந்திடச் செய்யுமே
1. கவலையினால் வரும் சோகம் உன் பார்வையில் மகிழ்வாய் மாறும்
அலை அலையாய் வரும் ஏக்கம்
உன் நினைவால் பனியாய் உருகும்
தேவனே உன் வார்த்தையில் நிலைத்திட வரம் தருவாய்
கானமே என் சீவனில் கலந்து உன் புகழ்பாடும்
இயேசுவே என் வசந்தமே மலர்ந்திட வாருமே
இயேசுவே என் நண்பனே அணைத்திட வாருமே
2. பாதத்தில் அமர்ந்திடும் நேரம் என் ஆன்மா உன்னிடம் பேசும்
உணர்வினால் எழுந்திடும் பாசம்
என் வாழ்வினில் நிழலாய்த் தொடரும்
தேவனே உன் பாதையில் நடத்திட கரம் பிடிப்பாய்
தேவனே உன் பார்வையில் நடந்திட அருள் புரிவாய்
தேவனே உன் பாதையில் நடந்திட கரம் பிடிப்பாய்