முகப்பு


417. என்னைச் சுமப்பதனால் இறைவா
என்னைச் சுமப்பதனால் இறைவா
உன் சிறகுகள் முறிவதில்லை
அள்ளி அணைப்பதனால் இறைவா உன் அன்பு குறைவதில்லை
ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும் வானம் கிழிவதில்லை -2
ஆயிரம் மைல்கள் நடந்திட்ட போதும் நதிகள் அழுவதில்லை -2

1. கருவைச்சுமக்கும் தாய்க்கு என்றும் குழந்தை சுமையில்லை
கருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு இமைகள் சுமையில்லை - 2
மதுவைச்சுமக்கும்மலர்களுக்கென்றும்பனித்துளிசுமையில்லை-2
வானைச் சுமக்கும்மேகத்திற்கென்றும்மழைத்துளி சுமையில்லை- 2

2. அகழும் மனிதரைத் தாங்கும் பூமிக்கு முட்கள் சுமையில்லை
இகழும்மனிதரில்இரங்கும்மனதுக்குச்சிலுவைகள்சுமையில்லை-2
உலகின் பாவம் சுமக்கும் தோள்களில் நானொரு சுமையில்லை - 2
உயிரை ஈயும் உன் சிறகின் நிழலில் என் இதயம் சுமையில்லை -2