முகப்பு


428.ஒளியாய் மழையாய் நீ பொழிந்தாய்
ஒளியாய் மழையாய் நீ பொழிந்தாய்
வளர்வேன் செழித்தே உயர்ந்திடுவேன்
கனிவாய்ப்பரிவாய்நீஅணைத்தால்இனிதாய்ப்புதிதாய்மலர்ந்திடுவேன்
இறைவா முதல்வாவழிகாட்டு என் இதயம் உன் இல்லம் விளக்கேற்று - 2

1. துணையாய் அருகே நீ வந்தால் - எந்தத்
தொலைவும் எளிதாய்க் கடந்திடுவேன் - 2
சுனையென அன்பு சுரந்து வந்தால் - நான்
சுகமாய் மகிழ்வாய் நடந்திடுவேன் - இறைவா

2. ஆற்றலும் அருளும்நீ தந்தால்ஓராயிரம்பணிகள்ஆற்றிடுவேன் - 2
தேற்றிட நீயும் அருகிருந்தால் எந்தத்
துயரச் சுமையும் தாங்கிடுவேன் - இறைவா