முகப்பு


430. கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும்
கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும்
புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை
நீ கடந்திட நேர்ந்தாலும் உன்னோடு நான் இருப்பேன் - 2
அஞ்சாதே கலங்காதே - 2

1. தேவனின் பார்வையில் நீ மதிப்புள்ளவன்
பொன் விளைநிலம் போலே
பூமியில் வாழ்ந்திடும் யாவிலும் உன் நிலை
உயர்ந்தது அவராலே - 2
பால் நினைந்தூட்டிடும் தாய் மறந்தாலும் நீ அவர் மடி மேலே
மனம் தேற்றுவார் பலம் ஊட்டுவார் வாழ்வினில் ஒளிதானே
அஞ்சாதே கலங்காதே - 2

2. பாலையில் பாதையும் பாழ்வெளி ஓடையும்
தோன்றிடும் அவர் கையால்
வான்படை ஆண்டவர் வாய்மொழியால் வரும்
மேன்மையை எவர் சொல்வார் - 2
பார்வை இழந்தவர் வாய் திறவாதோர் யாவரும் நலமடைவார்
இறையாட்சியில் அவர் மாட்சியில் மானிடம் ஒன்றாகும்
அஞ்சாதே கலங்காதே - 2