முகப்பு


431. கடல் நோக்கி நதிகள் பாயும் ஒளி நோக்கி மலர்கள் சாயும்
கடல் நோக்கி நதிகள் பாயும் ஒளி நோக்கி மலர்கள் சாயும்
அகிலமும் படைத்த என் தலைவா எனை நோக்கி வருவதேன் - 2

1. குருவிகள் பறந்திடும் நேரத்திலே ஏணி தேவையில்லை - 2
நீரில் மீனினம் நீந்திடவே படகு தேடிச் செல்வதில்லை - 2
ஞாலம் தாங்கும் எந்தன் இறைவா என்னை நாடுவதேன் - 2

2. காத்திடும் இமைகள் அருகிருந்தும் விழிகள் காண்பதில்லை - 2
நெஞ்சில் உன்னொளி நிறைந்திருந்தும்
உள்ளம் ஏனோ உணர்வதில்லை - 2
தவறிச் செல்லும் ஆடு நானே என்னைத் தேடுவதேன் - 2