433. கருணை மழையில் நனைந்தேன்
கருணை மழையில் நனைந்தேன்
கவிதை வெளியில் பறந்தேன்
உயிரே உயிரே உனிலே சரணம் அடைந்தேன்
உறவின் உதயம் அறிந்தேன் - 2
1. தாய்மையின் தேடலில் தோன்றிடும் போலிகள்
வாழ்வின் வேலியல்லவா அதில் விளைவது வலியல்லவா - 2
உணர்வினில் தோன்றி உயிர்க்கொடி தீண்டி
உதித்திடும் உறவுகளே உயிர் நிறைந்திடும் மகிழ்வல்லவா
உருகிடும் உடல் வழியே உயர்ந்திடும் அருள்திரியே - 2
இழந்திடும் கர்வம் இணைந்திடும் இதயம்
இருப்பினில் இன்பம் இதுவே - 2
2. இரக்கத்தைச் சுரந்திடும் இதயத்தின் சுனைகளில்
பொங்கும் புனிதமல்லவா அது புண்ணிய நதியல்லவா - 2
தன்னலம் கரைத்து தியாகத்தில் குடைந்து
வளர்ந்திடும் கனிதருவேன் நான் பொங்கிடும் வரமல்லவா
எழுந்திடும் திசைகளிலே சிறகுகள் விரிகின்றதே - 2
புன்னகை பூக்கும் பூமியை நோக்கும்
நெஞ்சினில் என்றும் இன்பம் - 2
கவிதை வெளியில் பறந்தேன்
உயிரே உயிரே உனிலே சரணம் அடைந்தேன்
உறவின் உதயம் அறிந்தேன் - 2
1. தாய்மையின் தேடலில் தோன்றிடும் போலிகள்
வாழ்வின் வேலியல்லவா அதில் விளைவது வலியல்லவா - 2
உணர்வினில் தோன்றி உயிர்க்கொடி தீண்டி
உதித்திடும் உறவுகளே உயிர் நிறைந்திடும் மகிழ்வல்லவா
உருகிடும் உடல் வழியே உயர்ந்திடும் அருள்திரியே - 2
இழந்திடும் கர்வம் இணைந்திடும் இதயம்
இருப்பினில் இன்பம் இதுவே - 2
2. இரக்கத்தைச் சுரந்திடும் இதயத்தின் சுனைகளில்
பொங்கும் புனிதமல்லவா அது புண்ணிய நதியல்லவா - 2
தன்னலம் கரைத்து தியாகத்தில் குடைந்து
வளர்ந்திடும் கனிதருவேன் நான் பொங்கிடும் வரமல்லவா
எழுந்திடும் திசைகளிலே சிறகுகள் விரிகின்றதே - 2
புன்னகை பூக்கும் பூமியை நோக்கும்
நெஞ்சினில் என்றும் இன்பம் - 2