முகப்பு


439. கள்ளமில்லா ஒரு வெள்ளி நிலா
கள்ளமில்லா ஒரு வெள்ளி நிலா - என
உள்ளமெல்லாம் வரும் தெள்ளமுதா
தீராதப் பாசமே நறும் தேனான இயேசுவே
அன்பே பாரினில் நீயும் நானும்
ஒன்றாய் வாழ்வது வாழ்க்கையே வாரும் தேவா வாருமே

1. எங்கே நோக்கினும் தனிமையே - உனை
என் மனம் மறந்ததன் தீமையே
கண்களும் நீரினில் ஆடுதே இறை கர்த்தருன் பூமுகம் தேடுதே
தேவ தேவா சிலுவைநாதா திரும்ப நாவினில் வாருமே - 2
தாகம் யாவும் தீருமே தூய வாழ்வைத் தாருமே
தாயும் நீயாய் சேயும் நானாய் வாழ வேண்டும் நாளுமே

2. எல்லாம் தேவனின் மகிமையே - அதை
எங்ஙனம் புகழ்வது ஏழையே
என் மனம் நீ வரும் போதிலே - பெரும்
நிம்மதி ஆயிரம் வாழ்விலே
வாழ்வும் நீயே வழியும் நீயே உயிரும் நீ இனித் தேவனே - 2
வாரும் நாவில் இயேசுவே நீயும் நானும் பேசவே
ஆயன் நீயாய் தோளில் நானாய் வாழ வேண்டும் நாளுமே