முகப்பு


442.கால்கள் வழுக்கினாலும் காப்பதுன் கரமல்லவா
கால்கள் வழுக்கினாலும் காப்பதுன் கரமல்லவா
கருவில் இருக்கும் முன்னே தொடர்ந்திடும் அருளல்லவா
காத்திடும் கரமல்லவா என்னைச் சுமந்திடும் சிறகல்லவா
கருவினிலிருந்து தொடர்ந்திடும் அருளல்லவா
என்னைத் தாங்கிடும் தாயல்லவா
சா கம பா சநி தநி சா மா பா கரி சநி சா

1. இமை மூடும் பொழுதினில் இனித்திடும் தாலாட்டே
கசிந்திடும் கண்ணீரில் கனிந்திடும் ஆறுதலே ஆ - 2
சுகமான சுமையாகச் சுமந்திட்டப் பேரன்பே
தனிமையில் துணையாகித் தேற்றிடும் இறையன்பே - 2

2. மழலையின் மொழிதனில் உருகிடும் தாய் நீயே
தவழும் நான் எழும்போது மகிழ்ந்திடும் மனம் நீயே ஆ - 2
தடுமாறும் போதென்னைக் கரம் பற்றும் தாயன்பே - 2
உன் சேயாய் நான் என்றும் உன் தோளில் சாய்ந்திருக்க - 2