443. காலம் மலராதோ இறைவா கவலை மறையாதோ
காலம் மலராதோ இறைவா கவலை மறையாதோ
கண்ணீரும் அழுகையெல்லாம் புரட்சிக் கனலாக வெடிக்காதோ
கனவெல்லாம் நனவாகுமோ - 2
1. எல்லார்க்கும் எல்லாம் என்று உலகில் எல்லாமே படைத்தாயே
இல்லாரே இல்லை என்ற நியதி இதமாக வகுத்தாயே - 2
விண்ணை முட்டும் எழில்மாளிகை
மண்ணை முட்டும் சிறு கூரைகள் - 2
ஏன் இந்தப் பெரும் பேதங்கள் நீயே ஏற்காத வெறும் பேதங்கள்
2. சமத்துவம் மலரும் என்றே நீயும் உலகெங்கும் சொல்லிவைத்தாய்
அன்புகள் மலரும் என்றே அன்று
சிலுவையில் தொங்கி நின்றாய் - 2
உரிமைகளோ சிறையானதே வறுமை ஒன்றே வளமானதே- 2
ஏன் இந்த நிலையானதோ உன் சொல்லாலே இனி மாறுமோ
3. பொய்கூறும் அரசியலும் நாளும் தடுமாறும் ஆட்சிகளும்
விலைபோகும் நீதிகளும் நம்மை உலையாக்கும் சேதிகளும்-2
பகை வீதியில் கடும் ஆயுதம்
புகை போன்றெழும் போரின் விசம் - 2
எல்லாமே இனி மாறுமோ உன் சொல்லாலே அருளாகுமோ
கண்ணீரும் அழுகையெல்லாம் புரட்சிக் கனலாக வெடிக்காதோ
கனவெல்லாம் நனவாகுமோ - 2
1. எல்லார்க்கும் எல்லாம் என்று உலகில் எல்லாமே படைத்தாயே
இல்லாரே இல்லை என்ற நியதி இதமாக வகுத்தாயே - 2
விண்ணை முட்டும் எழில்மாளிகை
மண்ணை முட்டும் சிறு கூரைகள் - 2
ஏன் இந்தப் பெரும் பேதங்கள் நீயே ஏற்காத வெறும் பேதங்கள்
2. சமத்துவம் மலரும் என்றே நீயும் உலகெங்கும் சொல்லிவைத்தாய்
அன்புகள் மலரும் என்றே அன்று
சிலுவையில் தொங்கி நின்றாய் - 2
உரிமைகளோ சிறையானதே வறுமை ஒன்றே வளமானதே- 2
ஏன் இந்த நிலையானதோ உன் சொல்லாலே இனி மாறுமோ
3. பொய்கூறும் அரசியலும் நாளும் தடுமாறும் ஆட்சிகளும்
விலைபோகும் நீதிகளும் நம்மை உலையாக்கும் சேதிகளும்-2
பகை வீதியில் கடும் ஆயுதம்
புகை போன்றெழும் போரின் விசம் - 2
எல்லாமே இனி மாறுமோ உன் சொல்லாலே அருளாகுமோ