முகப்பு


445. செந்தமிழில் உந்தன் புகழ் எழுதி நான்
செந்தமிழில் உந்தன் புகழ் எழுதி நான்
பாடிடுவேன் இறைவா - என் சிந்தனையில் நீ இருந்து வாழ
எழுந்தருள்வாய்த் தலைவா என்னில் - 2

1. பாலையில் மன்னா வழங்கி நின்றாய்
பலியினில் உன்னை வழங்குகின்றாய் - 2
காலையில் உணவின்றித் தவிக்கின்றேன் - 2
கனியமுதாய் என்னில் எழுந்தருள்வாய் - 2

2. உன்னுடல் உயிர்தந்ததுன் வல்லமையால்
உலகினர் உயிர்ப்பதுன் வல்லமையால் - 2
என்னுடல் உயிருடன் வாழ்ந்திடவே - 2
இறைமகனே என்னில் எழுந்தருள்வாய் - 2