முகப்பு


448. தந்தையும் தாயும் மறந்திட்டாலும் மறந்திடாத தெய்வமே
தந்தையும் தாயும் மறந்திட்டாலும் மறந்திடாத தெய்வமே
நண்பரும் உறவும் பிரிந்திட்டாலும் பிரிந்திடாத இயேசுவே
உனது இரக்கம் இன்றியே உயிர்கள் வாழ்வது இல்லையே - 2
கண்ணின் மணியாய்ச் சிறகின் நிழலில்
அணைத்துக் காக்கும் ஆயனே

1. காலை மலர்ந்து மாலைக்குள் வாடி மடியும் மலரைப் போல்-2
எந்த உறவும் முடிந்திடும் உந்தன் உறவோ தொடர்ந்திடும்-2
கடலும் நீரும் காற்றும் ஓயும் கைவிடாதப் பேரன்பே

2. பாலை நிலமும் பூத்திடும் பாறையும் நீர் சொரிந்திடும் - 2
உந்தன் கிருபை போதுமே எந்த நிலையும் மாறுமே - 2
கல்லும் கனியும் இறப்பும் உயிர்க்கும்
வியக்க வைக்கும் அருளன்பே