முகப்பு


449. தந்தையும் தாயுமான நல்லவரே இறைவா
தந்தையும் தாயுமான நல்லவரே இறைவா
பிள்ளைகள் கூடிவந்தோம்
எந்த இனம் என்ன குலம் என்று யாமறியோம் தந்தாய்
பிள்ளைகளாகி நின்றோம்
இங்கு வாரும் வல்லமையோடு வரங்களைத் தாரும்
எங்கள் பூமி புதுமை காணும் மனிதம் உயர்வு பெறும் - 2

1. எங்களுக்குத் தீமை செய்தோர்களை
மன்னிக்கும் மனம் வளர்த்தோம்
அன்புடன் அரவணைத்தோம்
அனுதின உணவை எங்களுக்கு என்றும் உறுதி செய்தருளும்
வறுமை நீங்கச் செய்யும் - இங்கு வாரும்

2. உன்னதத்தில் உம் மகிமை ஆள்வது போல்
இங்கும் எங்குமே எங்கிலும் உம்மரசே
எம் இறைவா இவ்வுலகில் காணும் நாள் வருக
வல்லவரே தலைவா சந்நிதி சரணடைந்தோம்
நல்லவரே இறைவா வாழ்வு தந்திடுவீர்
வல்லவரே தலைவா மன்னிக்கும் மனம் தருவீர்
பிள்ளைகள் கூடி வந்தோம் - தந்தையும் தாயுமான