முகப்பு


459. தாயைப்போல என்னைத் தேற்றும் எந்தன் தெய்வமே
தாயைப்போல என்னைத் தேற்றும் எந்தன் தெய்வமே
சேயைப்போல உந்தன் மார்பில் என்னைத் தாங்குமே
என் காயங்கள் நீ ஆற்றவா என் சோகங்கள் நீ மாற்றவா
விழியின் ஈரம் காயும் முன்பே அணைக்கவா
வழிகள் சூழும் தருணம் எல்லாம் காக்கவா

1. உண்மையென்ன பொய்ம்மையென்ன விளங்கவில்லையே
விழிகள் காட்டும் வெளிச்சம் கூட உறுதியில்லையே
பாசமென்ன வேசமென்ன அறியவில்லையே
அழிவின் குழியில் விழுந்த நிமிடம் யாருமில்லையே
மரணம் சூழ்ந்த இருள்வழிப் பார்வை தொலைத்த இருவிழி
நீ வாருமே கை தாருமே
நரக துன்பம் அறிந்தேன் இறைவா மீட்க வா

2. எந்தப் பாதை வாழ்வின் பாதை தெரியவில்லையே
அறிந்தபோதும் திரும்பி வரவும் வழிகள் இல்லையே
கடலில் பாதி கரையில் பாதி கால்கள் வைக்கிறேன்
அலையின் வலிமை இழுத்துச் செல்லும் நிலையில் இருக்கிறேன்
வாழ்க்கை முழுதும் வருத்தங்கள் இதயம் வழியும் துயரங்கள்
என் வாழ்வையே பூந்தோட்டமாய்
மாற்றும் வல்ல தேவன் என்று காட்டவா