460.தாலாட்டும் தாய் நீயல்லோ
தாலாட்டும் தாய் நீயல்லோ
கண்ணில் நீரோடு தேடும் பிள்ளை நான்
கருவிலிருந்தே என்னைச் சுமந்தாய்
கருவிழி போலென்னை இதுவரைக் காத்தாய்
இறையே கனியே அனுதினம்
இருளில் பாரம் சுமந்துவாடும் என்னைத் - தாலாட்டும்
1. வாழ்வு எல்லாம் தேடல் தானே
உனைத்தேடும் என்வாழ்வு வீணில் கரைந்திடுமோ -2
தேடித் தேடிச் சோர்ந்தாலும் தேடல் தொடர்ந்திடுமே - 2
என் தேவன் நீயின்றி மகிழ்வேது இறைவா
2. காலமெல்லாம் காத்திருந்தாய்
உன்னைவிட்டுச் சென்றாலும் நீயே கதியானாய் - 2
கால்கள் போகும் திசையெல்லாம் பாதை நீ தந்தாய்
உனைச் சேரும் பொழுதெல்லாம் திருநாளே இறைவா
கண்ணில் நீரோடு தேடும் பிள்ளை நான்
கருவிலிருந்தே என்னைச் சுமந்தாய்
கருவிழி போலென்னை இதுவரைக் காத்தாய்
இறையே கனியே அனுதினம்
இருளில் பாரம் சுமந்துவாடும் என்னைத் - தாலாட்டும்
1. வாழ்வு எல்லாம் தேடல் தானே
உனைத்தேடும் என்வாழ்வு வீணில் கரைந்திடுமோ -2
தேடித் தேடிச் சோர்ந்தாலும் தேடல் தொடர்ந்திடுமே - 2
என் தேவன் நீயின்றி மகிழ்வேது இறைவா
2. காலமெல்லாம் காத்திருந்தாய்
உன்னைவிட்டுச் சென்றாலும் நீயே கதியானாய் - 2
கால்கள் போகும் திசையெல்லாம் பாதை நீ தந்தாய்
உனைச் சேரும் பொழுதெல்லாம் திருநாளே இறைவா