முகப்பு


477. நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம்
நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம்
எந்நாளும் உனக்காக ஏங்கும் மனம் - 2
இறைவா இறைவா இறைவா இறைவா

1. மழையாக வந்தும் மனம்மீது நின்றும்
நனையாத நிலமாகினேன்
ஒளியாக நிறைந்தும் வாழ்வோடு இணைந்தும்
விடிவில்லா இரவாகினேன் - 2
உயிரூட்டும் அருள்மேகம் எனைச் சூழுமோ
வாழ்வேற்றும் ஒளிவெள்ளம் எனை ஆளுமோ - 2 இறைவா

2. கண்ணீரில் மூழ்கிப் போராடும் நிலைபோல்
தவிக்கின்றேன் உனைத் தேடியே
போர் வந்த காலம் துடிக்கின்ற புவிபோல்
அழுகின்றேன் துணை நாடியே - 2
எதனாலும் நிறையாத வெறுமையிது - உன்
அருளின்றித் துயிலாத இதயம் இது - 2 இறைவா